×

தா.பழூர் அருகே சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர் வீட்டில் தீ ரூ.2லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

தா.பழூர், பிப்.17: தா.பழூர் அருகே உள்ள சிந்தாமணி ஊராட்சி காமராஜ் நகரை சேர்ந்த தொப்புலான் மகன் அறிவழகன் (47). சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர். இவர் அருகிலுள்ள தென்கச்சிபெருமாள் நத்ததிற்கு வேலைக்கு சென்றுள்ளார்.
இவரது மனைவியும் வீட்டில் இல்லை. குழந்தைகள் பக்கத்து தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு காட்டுத்தீ போல் எரிய தொடங்கியது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முற்பட்டுள்ளனர்.இருப்பினும் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது .இதில் . ஒலிப்பெருக்கி, லைட் , ஆம்ப்ளிபையர், சேர் உள்ளிட்ட சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான ெபாருட்கள் எரிந்து நாசமானது. மேலும் வீட்டில் உபயோகப்படுத்தி வந்த பீரோ ,கிரைண்டர் உள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் பீரோவில் வைத்திருந்த ரூ.45 ஆயிரம் மற்றும் அடையாள அட்டைகள் ,ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் தீயில் கருகிபோனது. தீயை அணைப்பதற்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தும் ஜெயங்கொண்டத்திலிருந்து வருவதற்கு தாமதம் ஆனதால் வீடு முற்றிலும் எரிந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க போராடியும் பலனில்லை.

Tags : owner ,Sound Service ,Pallur ,Rs ,
× RELATED உணவக உரிமையாளர் மீது தாக்குதல்: பாஜக நிர்வாகி கைது